புளூமெண்டல் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!!
கொழும்பு புளூமெண்டல் பகுதியில் கடந்த மாதம் 31ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் வைதடது குற்றப்புலனாய்வு பிரிவினரால் இம்மாத் 06ம் திகதி சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 28 வயதுடைய உடற்பயிற்சி ஆலோசகராக கடமையாற்றக்கூடியவர் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதாண சந்தேக நபரை கைது செய்வதற்காகவும் இதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கண்டுபிடிப்பதற்காகவும் கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் முனனெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது சந்தேகநபர்கள் வருகை தந்த வாகனம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரனைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating