விழுப்புரம்: குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் மரணம்
Read Time:1 Minute, 2 Second
விழுப்புரம் அருகே குளத்தில் குளிக்க சென்ற இரண்டு சிறுமிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம், சோழந்தனூரைச் சேர்ந்தவர்கள் ஸ்வேதா (11), சுமித்ரா (8). இருவரும் அக்கா, தங்கை ஆவர். இருவரும் அந்த ஊரில் உள்ள ஒரு குளத்தில் குளிக்கச் சென்றனர். அப்போது தண்ணீரில் மூழ்கி விட்டனர். இருவரும் உதவி கோரி அபயக் குரல் எழுப்பினர். இதையடுத்து கிராமத்தினர் விரைந்து சென்று குழந்தைகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் சிறுமிகள் இருவரும் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்து விட்டனர். அவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.