ராஜபாளையம் அருகே வீடு இடிந்து கணவன், மனைவி பலி

Read Time:1 Minute, 16 Second

ராஜபாளையம் அருகே பெய்த கனமழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் கணவனும், மனைவியும் உயிரிழந்தனர். ராஜபாளையம் அருகேயுள்ள மலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ் (35வயது). கூலித் தொழிலாளியான இவருக்கு கோவிந்தம்மாள்(30வயது) என்ற மனைவியும், ஸ்ரீதேவி (2வயது) என்ற மகளும் இருக்கிறார்கள். ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் மாடி வீட்டில் குடியிருக்கும் ரமேஷ் குடும்பத்தினரின் வீடு மழையால் மோசமான நிலையை அடைந்து திடீரென இடிந்து விழுந்தது. இதில், ரமேஷ், கோவிந்தம்மாள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஸ்ரீதேவி மற்றும் கீழ் வீட்டில் குடியிருந்த ராஜேஸ்வரி ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விழுப்புரம்: குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் மரணம்
Next post வீரகேசரி வார வெளியீட்டின் ஊடகவியலாளர்களும் சாரதியும் கைது