கருக்கலைப்பு மாத்திரைகள் உள்ளிட்ட பெருந்தொகை மருந்துகளுடன் ஒருவர் கைது!!
Read Time:1 Minute, 17 Second
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒருதொகை மருந்துகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் சென்னையில் இருந்து வந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக, சுங்க ஊடகப் பேச்சாளர் லேஸ்லி காமினி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சந்தேகநபர் வசமிருந்து கருக்கலைப்புக்காக பயன்படுத்தும் மாத்திரைகள் உள்ளிட்ட பெருந்தொகை மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றின் பெறுமதி 13 இலட்சத்து 34,000 ரூபாய் எனவும் சுங்க ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
சந்தேகநபர் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 44 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating