ஐ.தே.க அலுவலகத்திற்கு சேதம் ஏற்படுத்திய ஐவரில் இருவர் கைது!!
Read Time:1 Minute, 12 Second
வெலிகம – தெலஹிடியாவ பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்திற்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த ஐவர் குறித்த அலுவலகம் மீது கறுப்பு எண்ணையை வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் அங்கிருந்த பெணர் மற்றும் கட்டவுட்களுக்கும் அவர்கள் சேதம் விளைவித்துள்ளனர்.
இது குறித்து வெலிகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் இரண்டு சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளனர்.
அத்துடன் இவர்கள் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Average Rating