கொள்ளுப்பிட்டியில் ஆணின் சடலம் மீட்பு!!
கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்பகுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலின் படி குறித்த சடலம் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவத்தில் 40, 45 வயது மதிக்கத்தக்க ஒருவரே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் இதுவரை இவர் அடையாளம் காணப்படவில்லை.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.