நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு நிரந்தர உத்தரவாதம் அளிக்கின்றோம் – சம்பிக்க!!

Read Time:2 Minute, 27 Second

2036026926champika-Lஎதிர்வரும் தேர்தலில் அமைக்கப்படும் பாராளுமன்றமும் தற்போதைய ஜனாதிபதியும் எதிர்வரும் 2020ம் ஆண்டு வரையில் பதவியில் இருப்பார்கள் என்பதுடன், ஜனாதிபதியை தெரிவு செய்த சக்தி ஐக்கிய தேசிய முன்னணியே ஆகும் என்று மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் புகைப்படங்களை திருடினாலும், ஜனாதிபதியின் மக்கள் ஆணையும் இதயமும் இருப்பது ஐக்கிய தேசிய முன்னணியின் பக்கமே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வௌியிட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் இன்று மக்கள் பயமுறுத்தப்படடுக் கொண்டிருக்கின்றார்கள்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும், புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்கும் என்றும் கூறி மக்களை அச்சமடையச் செய்கின்றார்கள்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாம் நிரந்தர உத்தரவாதம் அளிக்கின்றோம்.

மக்கள் இப்பொழுது சுதந்திரமாக இருக்கின்றார்கள். இதுவரை காலமும் இரகசியமாக இருந்து வந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய கும்பல் யார் என்று நீதிமன்றின் ஊடாக மக்கள் தெரிந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

இன்று வெலே சுதாவின் ஹெரோய்ன் அபிவிருத்தி வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் பெக்கரின் கசினோ அபிவிருத்தி திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

எத்தனோல் அபிவிருத்தி வியாபாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் நாங்கள் பொதுவான அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றோம் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரிசாத்தின் அரசியல் வாழ்வு முடியப் போகிறது! ஹக்கீம்!!
Next post முருகன், சாந்தன், நளினி விடுதலை வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!!