திருவாரூர் அருகே போலி டாக்டர் கைது!!
Read Time:59 Second
திருவாரூர் அருகே எரவாஞ்சேரி பகுதி ஆனந்தபுலியூர் அக்ரகார தெருவை சேர்ந்தவர் வெங்கடபெருமாள் (வயது 63). இவர் 10–ம் வகுப்பு வரைமட்டும் படித்து விட்டு தன்னை டாக்டர் எனக்கூறி கொண்டு அப்பகுதியில் பொதுமக்களுக்கு சிகிச்சையளிப்பதாக புகார் எழுந்தது.
இதன்பேரில் திருவாரூர் மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் செங்குட்டுவன் அங்கு சென்று வெங்கடபெருமாளிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் போலி டாக்டர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் எரவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார், போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடபெருமாளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating