பதுளை மாவட்டத்தில் வாக்குபெட்டிகள் அனைத்தும் வாக்குசாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது!!
Read Time:53 Second
நாளை நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று பதுளை மாவட்டத்தில் வாக்குபெட்டிகள் அனைத்தும் வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவூம் பதுளை மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் முழுமை பெற்றுள்ளதாகவும் பதுளை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவிக்கின்றார்.
இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பதுளை மாவட்டத்தில் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு இம்முறை 620486 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.
Average Rating