பெற்றோல் குண்டு வீச்சு – எட்டுப் பேர் காயம்!!
Read Time:1 Minute, 7 Second
ரம்புக்கன – எபுல்அபே பிரதேசத்தில் இடம்பெற்ற பெற்றோல் குண்டு வீச்சில் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு சூதாட்ட நிலையம் ஒன்றில் இடம்பெற்ற மோதலே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்கள் ரம்புக்கன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கேகாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை கேகாலை மற்றும் ரம்புக்கன பொலிஸார் இணைந்து மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
Average Rating