அமைதியான தேர்தல் நடைபெற்றது – ஐரோப்பிய ஒன்றியம்!!
Read Time:1 Minute, 26 Second
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அவர்களின் விருப்பப்படி வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பாக கடுமையான சட்டத்தை அமுல்படுத்தும் சரியான நிர்வாகம் காணப்பட்டதனால் அமைதியான தேர்தலை ஒன்றை நடத்த முடிந்ததாக தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக வருகை தந்திருந்த ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவின் தலைவர் கிரிஸ்டியன் பெரேடா தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையாளர் மற்றும் தன்னுடன் வருகை தந்திருந்த குழுவினரும் வெளிப்படைத்தன்மையுடனும் பாரபட்சமற்ற முறையிலும் நடந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.
விஷேடமாக சட்டவிரோத தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
Average Rating