மேற்கு வங்காளத்தில் மார்க்.கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரசார் மோதல்: தொழிற்சங்க நிர்வாகி அடித்துக்கொலை!!
Read Time:1 Minute, 18 Second
மேற்கு வங்காள மாநிலம், ஜமுரியாவில் சுரங்கத்தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்க அமைப்பான சி.ஐ.டி.யூ. சார்பில் நேற்றுமுன்தினம் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் திடீரென போராட்டத்தில் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதில் இருதரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அப்போது சி.ஐ.டி.யூ. பிரமுகர் ரலால் பவுரி (வயது 45) என்பவரை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கம்பாலும், கம்பியாலும் அடித்துக்கொன்று விட்டு தப்பி ஓடி விட்டனர். ஆனால் இதனை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்து உள்ளது. சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் தான் தங்களை தாக்கியதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் மேற்குவங்காளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating