யாழில் இரண்டு சடலங்கள் மீட்பு.!!
Read Time:1 Minute, 11 Second
யாழ். திருநெல்வேலி கேணியடி ஞான வைரவர் ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள வீடொன்றில் இருந்து வயோதிப மாது ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் கோப்பாய் பொலிஸாரினால் இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.
ஆடியபாதம் வீதி, கேனியடியை சேர்ந்த சின்னமுத்து கைலாசம் (வயது 75) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதேவேளை யாழ். கொட்டடி பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்காலுக்கு அருகில் இருந்து ஆணொருவரின் சடலம் ஒன்றும் இன்று சனிக்கிழமை காலை யாழ்ப்பாண பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.
கொட்டடியை சேர்ந்த பூராசா கஜேந்திரன் (வயது 37) எனும் நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
Average Rating