2வது முறையும் போட்டியிட வேண்டும்! ஜனாதிபதியிடம் மக்கள் கோரிக்கை!!
Read Time:1 Minute, 17 Second
மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற இரண்டாவது முறையும் போட்டியிட வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கிண்ணியா மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று கிண்ணியா பகுதிக்கு ஜனாதிபதி விஜயம் செய்திருந்த போதே அவர்கள் இவ்வாறு கோரியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தாம் எதிர்பார்த்த அபிவிருத்திகள் தமக்கு இன்னும் கிடைக்கப் பெறவில்லை என மக்கள் இதன்போது மைத்திரிபால சிறிசேனவிடம் சுட்டிக்காட்டியதோடு, கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் போன்றன தொடர்பில் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் விளக்கினர்.
இது குறித்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் ஊடாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார்.
Average Rating