மொஹமட் ஹனீபா தேசியப் பட்டியலில்!!

Read Time:1 Minute, 45 Second

553543275Untitled-1இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு தேசியப் பட்டியலில் ஒரு ஆசனம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு அக் கட்சியால், 10வது விருப்பு இலக்கத்தில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த மொஹமட் ஹனீபா மொஹமட் நவாவ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீடின் கட்சி உறுப்புரிமை மற்றும் பதவி ஆகியன தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளன.

கட்சியின் ஒழுக்கங்களை மீறியமை தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப் பெறவில்லை என, மகஜன எக்சத் பெரமுனவின் சோமவீர சந்திரசிறி மற்றும் தேசிய விடுதலை முன்னணியின் பியசிறி விஜயநாயக்க ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் தோற்றவர்கள் தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டமைப்பு எதிரான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2வது முறையும் போட்டியிட வேண்டும்! ஜனாதிபதியிடம் மக்கள் கோரிக்கை!!
Next post மோட்டார் மற்றும் கைக் குண்டுகள் மீட்பு!!