வாகன விபத்தில் தாயும் மகளும் பலி
Read Time:54 Second
வவுனியா, புளியங்குளம், கல்மடுச்சந்தியில் நேற்று நண்பகல் 12.45 மணியளவில் பயணிகள் வான் மோதி தாயும், ஆறுமாத குழந்தையும் பலியாகியுள்ளனர். நேற்றுக் காலை வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற வாகனமே தாயையும், மகளையும் மோதிவிட்டு சென்றதாக தெரிய வருகிறது. மகள் ஸ்தலத்திலேயே மரணமானார். தாயார், வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மரணமடைந்துள்ளார். மல்லாவியைச் சேர்ந்த புலேந்திரன் நவலோஜினி (28 வயது) என்ற தாயும், அவரது மகளான தனோசிகாவுமே இறந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.