மாகாண சபைகளுக்கு சிறந்த தன்னாட்சியை வழங்க வேண்டும்!!
Read Time:1 Minute, 12 Second
இலங்கையின் புதிய அரசாங்கம் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் உடனடி முன்னுரிமை வழங்க வேண்டும் என, நவ சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் விக்ரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதிலும் அவர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றையதினம் அவரது அலுவலகத்தில் இருந்து இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே கருணாரத்ன இவ்வாறு கூறியுள்ளார்.
மாகாண சபைகளுக்கு சிறந்த தன்னாட்சியை வழங்க வேண்டும் என குறிப்பிட்ட அவர் ஒற்றையாட்சி கட்மைப்புக்குள் இதனை செயற்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
Average Rating