விபசாரத்தில் தள்ளிய பெண் புரோக்கர் கைது

Read Time:1 Minute, 53 Second

ஆந்திர மாநிலப் பெண்களை வைத்து விபசாரம் நடத்திய பெண் புரோக்கர் கைது செய்யப்பட்டார். சாலிகிராமம் விஜயராகவபுரம் பகுதியில் விபசாரம் நடப்பதாக, விபசார தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் மாறுவேடத்தில் விஜயராகவபுரம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சாதாரண உடையில் இருந்த போலீஸ்காரர் ஒருவரிடம், பெண் ஒருவர் தானாக வந்து பேசினார். தன் வீட்டில் வெளிமாநில இளம்பெண்கள் இருப்பதாகவும், ரூ.4 ஆயிரம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார். அத்தோடு அவரை அந்தப் பெண் அதே பகுதியில் 5வது தெருவில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு 2 இளம் பெண்கள் இருந்தனர். விபசாரம் நடப்பது உறுதியானதும், அந்த போலீஸ்காரர் தனிப்படை போலீசுக்கு தகவல் கொடுத்தார். அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த தனிப்படைப் போலீசார், போலீஸ்காரரை உல்லாசத்துக்கு அழைத்துச் சென்ற விபசார புரோக்கர் சாந்தி (37) என்ற பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த வீட்டிலிருந்த வெங்கடலட்சுமி (24), அலிசா (19) ஆகிய 2 ஆந்திர மாநிலப் பெண்கள் மீட்கப்பட்டு, மயிலாப்பூர் மகளிர் காப்பகத்தில் வைக்கப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஜெயலலிதா அறிக்கை: எனது உடலிலும் ஓடுகிறது தமிழ் ரத்தம் தான்!!
Next post ஆப்கானில் குண்டுவெடிப்பு; 5 எம்.பி.க்கள் உள்பட 90 பேர் பலி