பொலிஸாரை அச்சுறுத்திய சரத்குமாரவிற்கு நீதிமன்றம் எச்சரிக்கை!!
Read Time:1 Minute, 22 Second
பொலிஸ் அதிகாரிகள் சிலரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன இன்று நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜரானார்.
நீதிமன்றத்தின் அழைப்பாணையின் பேரில் ஆஜரான அவரை கடும் எச்சரிக்கையின் பின் நீதவான் விடுவித்ததுடன் எதிர்வரும் 16ம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு பணித்துள்ளார்.
கடந்த 7ம் திகதி நீர்கொழும்பு நகரசபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதான வீதியை மறித்து சட்டவிரோத கட்அவட் வைக்கப்பட்டிருந்தது.
இதனை பொலிஸார் அகற்றியபோது அவ்விடத்திற்குச் சென்ற சரத்குமார குணரத்ன, பொலிஸாரை அச்சுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் நீதிமன்றில் முறையிடப்பட்டதை அடுத்து நீதிமன்றம் விடுத்த அழைப்பாணையின் பேரில் சரத்குமார குணரத்ன ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating