போலி முத்திரை சந்தேகநபர்கள் இரண்டு பேர் கைது!!
நிட்டம்புவை பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட போலி முத்திரை ஒட்டப்பட்ட தபாலுரையுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு இவர்கள் இருவரும் கம்பஹ விஷேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் நிட்டம்புவை தபால் நிலையத்தில் வைத்து 15 ரூபா பெறுமதியான 03 போலி முத்திரைகள் ஒட்டப்பட்ட 513 கடித உரைகள் கண்டெடுக்கப்பட்டன.
அதன்படி நிட்டம்புவை தபால் நிலைய பொறுப்பதிகாரியினால் கம்பஹ விஷேட குற்றத்தடுப்பு பிரிவில் மேற்கொள்ளப்பட் முறைப்பாட்டையடுத்து இது தொடர்பான விசாரணைகளை கம்பஹ விஷேட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் மினுவாங்கொடை மற்றும் கொழும்பு 12ஐ சேர்ந்தவர்கள் என்பதுடன், குணசிங்கபுர பகுதியில் உள்ள அச்சகம் ஒன்றில் இந்த போலி முத்திரைகள் அச்சிடப்பட்டமை தெரிய வந்துள்ளது.
Average Rating