கரும்பு விவசாயிகள் வீதியில் இறங்கி போராட்டம்!!
Read Time:1 Minute, 6 Second
பெல்வத்த கரும்பு விவசாயிகள் கரும்பு கொள்வனவு அலுவலகத்திற்கு முன்பாக இன்று (31) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
தங்களது கரும்புகளை உரிய விலைக்கு கொள்வனவு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆர்ப்பாட்டக் காரர்கள் தெரிவிக்கின்றனர்.
மொனராகலை – பொத்துவில் வீதியை மறித்து கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சித்த போது பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் பெல்வத்த சீனி தொழிற்சாலை அதிகாரிகள் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்து கரும்புகளை உரிய விலைக்கு கொள்வனவு செய்வதாக உறுதி அளித்த பின் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டுச் சென்றுள்ளனர்.
Average Rating