எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கொள்ளை!!
Read Time:1 Minute, 11 Second
பதுளை – வெலிமடை – கெப்பட்டிபொல பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளது.
வேனொன்றில் வந்த இனந்தெரியாத சிலரால் இன்று (31) அதிகாலை, இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது அங்கிருந்த எரிபொருள் நிரப்புணரும், காவலாளியும் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், அவர்கள் இருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பணம் கொள்ளையிடப்பட்டிருக்கலாம் என, எரிபொருள் நிரம்பும் நிலையத்தின் முகாமையாளர் குறிப்பிட்டார்.
வெலிமடை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating