இறுதிப் பயணம் சென்ற தாயும் பிள்ளையும்!!
Read Time:1 Minute, 15 Second
ஹிக்கடுவை தொடந்துவ பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் பிள்ளையும் பலியாகியுள்ளனர்.
கொழும்பில் இருந்து காலி நோக்கிச் சென்ற வேன் ஒன்றும் எதிரே வந்த முச்சக்கர வண்டி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி உட்பட மூன்று பெண்களும் சிறு பிள்ளை ஒன்றும் காயமடைந்த நிலையில் கராப்பிட்டிய மற்றும் பலப்பிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுள் தாயொருவரும் பிள்ளையும் வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் ஹிக்கடுவை சீனிகம பிரதேசத்தில் வசிக்கக் கூடிய 24 வயதுடைய தாயும் 1 வருடமும் 10 மாதமேயான குழந்தை ஒன்றும் எனத் தெரிய வந்துள்ளது.
Average Rating