மது போதையில் கத்தியால் குத்தி குடும்பஸ்தர் கொலை!!

Read Time:1 Minute, 32 Second

445482574Untitled-1மட்டக்களப்பு — ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியில் மதுபோதையில் கத்தியால் குத்தி குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பியோடியுள்ளார். இச் சம்பவம் ஞாயிறு இரவு 09.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரம்புக்கூடை விற்பனை செய்யும் இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையின்போது ஒருவர் மற்றவரை கத்தியால் குத்தியுள்ளதாக தெரியவருகிறது. கடுமையாக காயமடைந்த நபர் மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் செங்கலடி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் போது மரணமானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சம்பவத்தில் பலியானவர் 36 வயதுடைய கோணேஸ்வரன் ரமேஸ்குமார் என தெரியவந்துள்ளது.

ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சந்தேகநபரையும் தேடி வருகின்றனர். சடலம் செங்கலடி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மது குடிக்க பணம் தாராததால் மனைவியை உயிரோடு எரித்த கணவர்!!
Next post எரிபொருள் விலை விரைவில் குறைய வாய்ப்பு!!