பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் நாளை சத்தியப்பிரமாணம்!!

Read Time:1 Minute, 54 Second

1909225091Untitled-1புதிய அரசாங்கத்தின் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நாளை சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கடந்த வௌ்ளிக்கிழமை அமைச்சரவை அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்ததோடு, பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் சத்தியப் பிரமாணம் பிற்போடப்பட்டது.

இதன்படி நாளை (08) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னலையில் இவர்கள் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளதாக தெரியவருகின்றது.

இம்முறை பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 45 பேர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர்.

மேலும் இவர்களில் 27 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் மற்றையவர்கள் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தும் தேர்வாகவுள்ளனர்.

இதேவேளை தேசிய அரசாங்கத்தில் 48 அமைச்சர்களை நியமிக்க அனுமதியுள்ள போதும் கடந்த முறை 42 பேரே சத்தியப் பிரமாணம் செய்தனர்.

மங்கள சமரவீர உள்ளிட்ட மூவர் முன்னதாகவே அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதன்படி மீதமுள்ள மூவர் நாளை பொறுப்பேற்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றில் இரண்டு சுதந்திரக் கட்சிக்கும் ஏனைய ஒன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கிட்டவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாயாதுன்னவின் இராஜினாமாக் கடிதம் இதுவரை கிடைக்கப் பெறவில்லையாம்!!
Next post ஷியாம் கொலை வழக்கு சந்தேகநபர் வாஸ் குணவர்த்தன வைத்தியசாலையில்!!