பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் நாளை சத்தியப்பிரமாணம்!!
புதிய அரசாங்கத்தின் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நாளை சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
கடந்த வௌ்ளிக்கிழமை அமைச்சரவை அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்ததோடு, பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் சத்தியப் பிரமாணம் பிற்போடப்பட்டது.
இதன்படி நாளை (08) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னலையில் இவர்கள் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளதாக தெரியவருகின்றது.
இம்முறை பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 45 பேர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர்.
மேலும் இவர்களில் 27 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் மற்றையவர்கள் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தும் தேர்வாகவுள்ளனர்.
இதேவேளை தேசிய அரசாங்கத்தில் 48 அமைச்சர்களை நியமிக்க அனுமதியுள்ள போதும் கடந்த முறை 42 பேரே சத்தியப் பிரமாணம் செய்தனர்.
மங்கள சமரவீர உள்ளிட்ட மூவர் முன்னதாகவே அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதன்படி மீதமுள்ள மூவர் நாளை பொறுப்பேற்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இவற்றில் இரண்டு சுதந்திரக் கட்சிக்கும் ஏனைய ஒன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கிட்டவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
Average Rating