இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழு கலைக்கப்படாது!!
Read Time:1 Minute, 0 Second
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவை கலைப்பது குறித்து எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு இவ் வாரம் கலைக்கப்படவுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வௌியாகியுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவை நிறுவுவது, உறுப்பினர்களை நியமிப்பது மற்றும் நீக்குவது போன்றனவே 19வது திருத்தச் சட்டத்தின் படி நடைபெறும் எனவும் அதனை கலைக்க அதிகாரம் இல்லை எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating