சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்த நால்வர் கைது!!
Read Time:54 Second
பொகவந்தலாவ – பொகவான தமிழ் வித்தியாலயத்திற்கு அருகாமையில் நீண்ட நாட்களாக சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நான்கு பேரை பொலிஸார் இன்று பிற்பகல் கைதுசெய்துள்ளனர்.
மேலும் இதற்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் போன்றவற்றையும் பொலிஸார் இதன்போது மீட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நால்வரும் பொகவான தோட்டத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் நாளை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
Average Rating