மகனைக் கொன்ற தந்தை தற்கொலை: தாய், 4 மாத குழந்தை காயம்!!
மட்டக்களப்பு – வவுணதீவு – பருத்திச்சேனையில் இன்று நண்பகல் தந்தை ஒருவர் மகனை கத்தியால் குத்தி கொலை செய்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவத்தை கண்டு பயந்து மனைவி தனது 4 மாத குழந்தையுடன் கிணற்றில் பாய்ந்ததில் இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.நஸீர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
தாமோதரம் வினோத் என்ற 8 வயதான வாய்பேச முடியாத தனது மகனை தந்தை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் தாமோதரம் மகேந்திரன் ஆகிய 30 வயது தந்தை தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
சம்பவத்தை கண்டு பயந்த மகேந்திரன் குணலக்ஷ்மி என்ற தாய் தனது 4 மாத குழந்தையான மகேந்திரன் தனுவுடன் கிணற்றில் பாய்ந்தபோது காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating