கம்பஹாவில் 2 சடலங்களும் 4 வயது குழந்தை ஒன்றும் மீட்பு!!
Read Time:1 Minute, 10 Second
கம்பஹா உடுகம்பொல, கம்பொத்த பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்ககப்பட்டுள்ளன.
இன்று பகல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இந்த சடலங்களை கண்டெடுத்ததாக கடமை நேர பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
குறித்த இருவரும் கணவன் மனைவி என்றும் சில தினங்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த வீட்டில் 4 வயதுடைய குழந்தை ஒன்று உயிருடன் இருந்துள்ளதாகவும் அந்தக் குழந்தை தொடர்பான தகவல்கள் இதுவரை அறியப்படவில்லை என்றும் கடமை நேர பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
Average Rating