கருணா தரப்பு உறுப்பினர் சயனைட் உட்கொண்டு மரணம்!!

Read Time:1 Minute, 38 Second

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்க கருணா குழுவின் கிழக்கு பகுதி தலைமையக அரசியல் பிரிவின் தலைவரான ரீ.வீ.திலீபன் சயனைட் உட்கொண்டு மரணித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை பிள்ளையான் குழுவினர் தொப்பிகலை மீனகம்பேஸ் பகுதியை கைப்பற்றிய பின்பே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் மட்டக்களப்பு பிரதேச கருணா குழுவினரின் இடங்களையம் பிள்ளையான் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளன. மேற்படி பிள்ளையான் குழுவினரால் மீட்கப்பட்ட இரண்டு பகுதியிலிருந்தும் கருணாகுழுவில் இருந்த சுமார் 35 உறுப்பினர்கள் தமது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மேற்படி உறுப்பினாகளின் 15 பேர் சிறுவர்கள் என்றும் அவர்கள் யுனிசெப் நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாஅம்மான் விடுதபை; புலிகளின் உறுப்பினராக இருந்த வேளையில் மேற்படி பிரதேசத்தில் அலுவலகங்களை உருவாக்கியுள்ளார். பின்பு அப்பிரதேசம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆட்சிக்கு உட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post `தி.மு.க., என் வீடு; டி.ராஜேந்தர் விருந்தாளி’நெப்போலியன் புது விளக்கம்
Next post புலிகளின் இலண்டன் பொறுப்பாளர் சாந்தன் மீது லண்டனில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள்!!