கருணா தரப்பு உறுப்பினர் சயனைட் உட்கொண்டு மரணம்!!
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்க கருணா குழுவின் கிழக்கு பகுதி தலைமையக அரசியல் பிரிவின் தலைவரான ரீ.வீ.திலீபன் சயனைட் உட்கொண்டு மரணித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை பிள்ளையான் குழுவினர் தொப்பிகலை மீனகம்பேஸ் பகுதியை கைப்பற்றிய பின்பே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் மட்டக்களப்பு பிரதேச கருணா குழுவினரின் இடங்களையம் பிள்ளையான் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளன. மேற்படி பிள்ளையான் குழுவினரால் மீட்கப்பட்ட இரண்டு பகுதியிலிருந்தும் கருணாகுழுவில் இருந்த சுமார் 35 உறுப்பினர்கள் தமது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மேற்படி உறுப்பினாகளின் 15 பேர் சிறுவர்கள் என்றும் அவர்கள் யுனிசெப் நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாஅம்மான் விடுதபை; புலிகளின் உறுப்பினராக இருந்த வேளையில் மேற்படி பிரதேசத்தில் அலுவலகங்களை உருவாக்கியுள்ளார். பின்பு அப்பிரதேசம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆட்சிக்கு உட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.