மினுவாங்கொடை விபத்து சம்பவம்; பஸ் சாரதிகளுக்கு பிணை!!
மினுவாங்கொடை, மிரிஸ்வத்தை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பஸ் சாரதிகள் இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது ஒருவருக்கு தலா 5,000 ரூபா ரொக்கப்பிணை மற்றும் 50,000 சரீரப்பிணை படி சந்தேகநபர்களை விடுதலை செய்வதற்கு நீதிபதி அனுமதி வழங்கியதாக நீதிமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பொலிஸார் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த சந்தேகநபர்களின் சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு மீண்டும் எதிர்வரும் 30ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்த வாகன விபத்தில் டிபென்டரில் பயணித்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் 05 பேர் பலியானதுடன் மேலும் 05 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating