கழிவகற்றும் இடத்திலிருந்து சடலம் கண்டெடுப்பு!!
Read Time:59 Second
குருணாகல் பொது வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள கழிவகற்றும் இடத்தில் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருணாகல் பிரதேசத்தை அண்மித்த பகுதியில் வசிக்கக்கூடிய 42 வயதுடைய நபரொருவரின் சடலம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த நபர் எவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என்று இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருணாகல் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Average Rating