கொழும்பில் இரு தரப்பினரிடையே மோதல் – 07பேர் வைத்தியசாலையில்!!
Read Time:47 Second
கொழும்பு வாழைத்தோட்டப் பகுதியில் இருதரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதலில், காயமடைந்த 07 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க்ப்பட்டுள்ளனர்.
சில காலங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் ஒன்றிற்கு பழிதீர்க்கும் வகையில் இந்த குழுக்கள் இன்று மோதலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating