மரக் கடத்தலில் ஈடுபட்டவர் கைது!!
Read Time:1 Minute, 9 Second
பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரங்களை எடுத்துச் செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிபிலை பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்ஓயா தேசிய வனப்பிரதேசத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்து பெறுமதிவாய்ந்த மரங்களை வெட்டி அதனை லெறி ஒன்றில் கொண்டு செல்லவதற்கு தயாராக இருந்த நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெட்டபட்ட மரங்களின் பெறுமதி 7 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பிபிலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Average Rating