கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பலி!!
Read Time:1 Minute, 6 Second
தம்புல்லை – மொரகொல்லாவ பிரதேசத்தில் 3 வயதான சிறுமி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
தாயுடன் வீட்டில் தனியாக இருந்த குறித்த சிறுமி, தாய்க்கு தென்படாமல் வீட்டில் இருந்து வெளியில் வந்த போத போது கிணற்றில் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னார் சிறுமியை தாய் தேடிய போது, அவர் கிணற்றில் விழுந்துள்ளதை கண்டுள்ளார்.
அயலவர்களின் உதவியுடன் சிறுமியை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிறுமி உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிவக்கின்றன.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating