யானைத்தந்தம் கடத்திய நால்வருக்கு விளக்கமறியல்!!
Read Time:1 Minute, 10 Second
அனுமதிப்பத்திரமின்றி யானைத்தந்தங்களை திருகோணமலைக்குச் கொண்டுசென்றதாகக் கூறப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவிலிருந்து இரண்டு யானைத்தந்தங்களை கொண்டு வந்த வேளையில் இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவர்களை 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
யானைத் தந்தங்களை வேன் ஒன்றில் திருகோணமலைக்கு கொண்டு சென்ற போது தென்னைமரவாடி சந்தியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வேன் புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
Average Rating