அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற மூடநம்பிக்கையில் 9 வயது சிறுமியை கொன்று ரத்தம் குடித்த கொடூரத் தந்தை கைது!!
Read Time:1 Minute, 17 Second
உத்தரப்பிரதேசம் மாநிலம், கான்பூர் நகர் மாவட்டத்தில் செல்வம் கொழிக்கும் என்ற மூடநம்பிக்கையில் 9 வயது சிறுமியை சுத்தியலால் அடித்துக்கொன்று, அவளது ரத்தத்தையும் குடித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த கிரிஜேஷுக்கு ஆலோசனை கூறிய ஒரு நண்பர், உன் மகளை நரபலி கொடுத்தால் உன் கஷ்டம் எல்லாம் நீங்கி செல்வம் பெருகும் என்று உபதேசித்துள்ளார்.
இதையடுத்து, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குஷி(9) என்ற சிறுமியை பிடித்து, தனது கண் எதிரிலேயே சுத்தியலால் அடித்துக் கொன்றதுடன், அவளது ரத்தத்தையும் குடித்ததாக மனைவி சுனிதா அளித்த புகாரின்பேரில் கிரிஜேஷை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
Average Rating