‘கூரிய கத்தியால் வயிற்றை வெட்டிக் கொள்வேன்’ – பந்துல!!
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்கவிடம் 50 கோடி நட்டஈடு கோரி சட்டக்கடதாசி ஒன்று அனுப்பவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தனகுக்கு விருப்பு வாக்குகள் குறைய மஹிந்த ஜயசிங்க வெளியிட்ட கருத்துக்களே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தோதய தொழிநுட்பகூடம் அமைப்பின்போது கோடி கணக்கில் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் வெளியிட்ட கருத்தினால் தனக்கு விருப்பு வாக்குகள் குறைந்ததாக பந்துல கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் தான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் காலி முகத்திடலில் வைத்து கூரிய கத்தியால் வயிற்றை வெட்டிக்கொள்வதாக பந்துல குணவர்த்தன சவால் விடுத்துள்ளார்.
நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Average Rating