உதவிப் பிரதேச செயலாளரின் வீட்டில் கொள்ளையிட்டவர் கைது!!
Read Time:1 Minute, 9 Second
யக்கலமுல்ல உதவிப் பிரதேச செயலாளரின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உதவிப் பிரதேச செயலாளரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சந்தேகநபரின் வாக்குமூலத்திற்கு அமைய கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் தங்க ஆபரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் இவர் காலி பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை இன்று காலி மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை யக்கலமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating