போதையில் கடமை புரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது!!
Read Time:1 Minute, 10 Second
குடித்து விட்டு கடமையில் ஈடுபட்டதாக கூறப்படும் பொலிஸ் சார்ஜன் ஒருவர் களுத்துறை தெற்கு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சார்ஜன் களுத்துறை சந்தைக்கு அருகிலுள்ள பகுதியில் குடித்து விட்டு கடமை புரிவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகநபரை வைத்திய அதிகாரி முன் ஆஜர்படுத்திய வேளை அவர் குடித்திருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் அவர் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையப் பகுதியில் பணிபுரியும் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating