முக்கொலை சந்தேகநபர் விளக்கமறியலில்!!

Read Time:1 Minute, 38 Second

1111361351Untitled-1கம்பஹா – உடுகம்பொல – கல்பொத்த பிரதேசத்தில் இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கம்பஹா பிரதம நீதவான் டிகிரி கே.ஜயதிலகவால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 10ம் திகதி கொலை செய்யப்பட்ட தம்பதிகளின் சடலம் வீடொன்றில் இருந்து கைப்பற்றப்பட்டது.

மேலும் வீட்டு கிணற்றில் இருந்து நான்கு வயதான அவர்களது மகளின் சடலமும் மீட்கப்பட்டது.

இந்தக் கொலைகளை குறித்த வீட்டில் பணி புரிந்த ஒருவரே செய்திருக்கலாம் என சந்தேகித்த பொலிஸார் நேற்று அவரை பஸ்யால பகுதியில் வைத்து கைதுசெய்தனர்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் தம்பதிகளை கடந்த 4ம் திகதி பொல்லால் தாக்கி கொன்றதாக தெரியவந்துள்ளது.

பின் மறுநாள் சிறுமியையும் கிணற்றில் தள்ளி கொன்றுள்ளார்.

இதேவேளை சந்தேகநபர் முன்னர் தனமல்வில பகுதியில் இடம்பெற்ற கொலை ஒன்றுடன் தொடர்புடையவர் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபத்து – தாய், இரு பிள்ளைகள் பலி, மேலும் மூவர் காயம்!!
Next post ஐ. நாவில் மங்கள சமரவீர பொய் கூறுகின்றார் – சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு!!