இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்!!
இலங்கையில் நிலவும் நீண்டகால பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்று கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி சுபினோ நெண்டி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி சுபினோ நெண்டி மற்றும் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது.
இதன்போதே சுபினோ நெண்டி ஜனாதிபதியிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
நிரந்தர தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு தற்பொழுது முடிந்துள்ளதாகவும், நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் எனவும் சுபினோ நெண்டி தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 30ம் திகதி நியுயோர்க் நகரில் இடம்பபெற இருக்கும் ஐ.நாவின் கூட்டத்தில் தான் பங்கேற்க இருப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
Average Rating