மொனரானலையில் கல்லீரல் அலற்சி நோய் தொற்று!!
Read Time:59 Second
மொனரானலை மாவட்டத்தில் கல்லீரல் அலற்சி நோய் (செங்கமாலை) பரவி வருவதாக மொனராகலை மாவட்ட பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் பாலித அதிகாரி தெரிவித்தார்.
மொனராகலை மாவட்டத்திலுள்ள வீடுகளுக்கு நீர் வழங்கும் இரண்டு நிலையங்களினூடாக இந்த நோய் பரவுவது கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியர் பாலித அதிகாரி தெரிவித்தார்.
அத்துடன் இதற்கு விரைவான தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்தார்.
நீர் அசுத்தமடைவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மொனராகலை மாவட்ட செயலாளர் டீ.எஸ். பத்மகுலசூரிய தெரிவித்தார்.
Average Rating