இலங்கையின் நல்லிணக்க முயற்சிக்கு நியூசிலாந்து வரவேற்பு!!
Read Time:1 Minute, 24 Second
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை அமைக்க இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முயற்சியை நியூசிலாந்து வரவேற்றுள்ளது.
இலங்கையர்களுக்கு உண்மையான மீளிணக்கப்பாட்டு மற்றும் அரசியல் அதிகாரப் பகிர்வு முயற்சிக்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கணிசமான நடவடிக்கையாக இருக்கும் என நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் முர்ரே மெக்குலி தெரிவித்துள்ளார்.
ஐநா விசாரணை அறிக்கை வெளியாகவுள்ள நிலையில் இன்று விடுத்துள்ள அறிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் முயற்சிகளுக்கு நியூசிலாந்து ஊக்குவிப்பு அளிக்கும் என அவர் கூறியுள்ளார்.
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் சமூகத்தினரிடையே நல்லிணக்கம் மற்றும் அதிகாரப் பகிர்வு ஏற்படுத்த இந்த முயற்சி உதவும் என எதிர்பார்ப்பதாக நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.
Average Rating