புலிகளின் இலண்டன் பொறுப்பாளர் சாந்தன் மீது லண்டனில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள்!!
Read Time:1 Minute, 11 Second
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் இலண்டன் பொறுப்பாளர் அருணாச்சலம் கிருஷாந்தக்குமார் (சாந்தன்) என்பவர் மீது இன்று லண்டனின் பிரதான குற்றவியல் நீதிமன்றமான ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் பயங்ககரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் தன் மீது சுமத்தப்பட்ட 5 குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு திரட்ட கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தமை, பயங்கரவாதத்துக்கு பயன்படுத்ததக் கூடிய நிதியைப் பெற்றுக்கொண்டமை போன்ற குற்றச்சாட்டுகள் இவற்றுள் அடங்குகின்றன. கிருஷாந்தக்குமார் அவர்கள் 5 மாதங்களுக்கு முன்னர் லண்டனில் கைது செய்யப்பட்டார். அவர் மீதான விசாரணை எப்போது ஆரம்பமாகும் என்று நீதிமன்றம் திகதி எதனையும் குறிப்பிடவில்லை.