ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடரும்!!
Read Time:1 Minute, 8 Second
ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பான இராணுவ விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
ஆரம்ப விசாரணை நீதிமன்றத்தின் பின்னர் சாட்சி தகவல்களை திரட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது.
இராணுவத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி இடம்பெற்ற ரத்துபஸ்வல சம்பவத்தின் பின்னர் இராணுவ சட்ட விதிமுறைகள் படி ஆரம்ப விசாரணை நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்ப விசாரணை நீதிமன்ற அறிக்கை கிடைத்ததன் பின்னர் சாட்சி தகவல்கள் திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதுடன் அது இதுவரை தொடர்வதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
Average Rating