கல்கிஸ்ஸை துப்பாக்கி சூட்டு சம்பவம்; 03 பேர் கைது!!
Read Time:1 Minute, 14 Second
கல்கிஸ்ஸை பிரதேசத்தில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான சந்தேகத்தில் 03 பேர் போமிரிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைத்த தகலின் படி வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி சகிதம் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 12ம் திகதி இரவு கல்கிஸ்ஸை பிரதேசத்தில் உள்ள இரவு விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் படுகாயமடைந்திருந்தார்
அந்த துப்பாக்கி சுட்டு சம்பவத்திற்கு இந்த சந்தேகநபர்கள் மூவரும் சம்பந்தப்பட்டிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர்கள் கடுவலை மற்றும் அவிஸ்ஸாவலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating