கப்பம் பெறும் குழுக்கள் தொடர்பான தகவல்கள் பொலிஸாரிடம்!!
Read Time:1 Minute, 19 Second
அநாமதேய தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி வியாபாரிகளை அச்சுறுத்தி கப்பம் பெறும் சம்பவங்கள் குறித்து தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.
சிறைச்சாலை கைதிகள் குழுவொன்றினால் இந்த மோசடிவேலை நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளதாக கடமை நேர பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
ஆகவே யாராவது கப்பம் வழங்குமாறு மிரட்டல் விடுக்கப்பட்டால் அச்சமின்று அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு கடமை நேர பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜயகொடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க மக்களின் உதவியை நாடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Average Rating