ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பா.உ உதயஷாந்த வைத்தியசாலையில்!!
மொனராகலை பிரதேசத்தில் பரவி வரும் செங்கமாலை நோய் தொற்றுக்கு தீர்வு வழங்க கோரி பிரதேச மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக வாகனப் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் விதமாக பிரதேசத்தின் வர்த்தக நிலையங்கள் பல மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இந்த நோய் தொற்று காரணமாக பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயஷாந்த குணசேகர திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரை கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Average Rating