“குடும்பக் கட்டுப்பாடு” செய்வதெல்லாம் அவங்க பிசினஸ்ங்க…: ஆண்கள் நினைப்பு இது தான்
“குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதெல்லாம் மனைவியின் வேலை; அவர்கள் தான் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் கவலைப் பட வேண்டியதில்லை!’ இப்படி தான், இந்திய ஆண்களில் பெரும்பாலானோர் மனநிலை உள்ளது என் பது, சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வேயில் தெரியவந்துள்ளது. மத்திய அரசின், தேசிய சுகாதார மற்றும் குடும்ப நலன் பற்றிய சர்வேயில் தெரியவந்த தகவல்கள்:
* செக்ஸ் உறவு வைப்பதன் மூலம், கரு உருவாகி விடு மோ என்று கணவர்களை விட, மனைவிகள் தான் அதிகம் கவலைப்படுகின்றனர்.
* செக்ஸ் உறவில் முழுமையான திருப்தி கிடைக்காது என்று கணவன் நினைப்பதால், காண்டம் பயன்படுத்த விரும்புவதில்லை.
* ஆனால், கருவுறும் நிலை ஏற்படுமோ என்று பயந்து, கருத்தடை மாத்திரை, சாதனத்தை பயன்படுத்துகின்றனர் மனைவியர்.
* “நாங்கள் ஆண்கள்; குடும்பக் கட்டுப் பாடு செய்துகொள்ள முடியாது; இது பெண்களின் “பிசினஸ்’ அவர்கள் தான் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டும்’ என்று, 32 சதவீத ஆண்கள் கூறியுள்ளனர்.
* “தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், செக்ஸ் வைத்தாலும் கருவுற முடியாது” என்று, பாதி ஆண்கள் நம்புகின்றனர்.
* குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விஷயங்களை தெரிந்து கொண்டு, செக்ஸ் வைப்பதாக, 61 சதவீத ஆண்களும், 49 சதவீத பெண்களும் கூறியுள்ளனர்.
* ஒரு குழந்தைக்கும் இன் னொரு குழந்தைக்கும் போதிய கால இடைவெளி இருக்க வேண்டும் என்பது தொடர் பான விழிப்புணர்வு, நகர தம்பதியரிடம் தான் உள்ளது. கிராமங்களில் இன்னும் பலருக்கு தெரியவில்லை.
* நகரத்தில் உள்ள 15 49 வயதுள்ள 74 சதவீத பெண்களுக்கு, கருத்தடை விஷயங்கள் முழுமையாக தெரிந்துள்ளது. கிராமங்களில் 54 சதவீதம் பேருக்கு தான் தெரிந்துள்ளது.
*சர்வே எடுத்த 29 மாநிலங்களில், 26ல், பெண்கள் தான் கருத்தடை ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்ற மனப் பான்மை வளர்ந்துள்ளது; பெண்கள் ஆபரேஷன் செய்யும் நடைமுறையும் காணப்படுகிறது.
* நகரங்களில் உள்ள பெண்கள், சராசரியாக அதிகபட்சம் இரண்டு குழந் தைகள் பெறுகின்றனர்; கிராமங்களில் இந்த எண்ணிக்கை மூன்றாக உள்ளது.